சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,51,132 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,624 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,62,177 ஆக உள்ளது. இதேபோல், நேற்று சிகிச்சை பெற்று வந்த 1,639 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,09,435 ஆக உள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 24 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல், சென்னையில் நேற்று 189 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கோவையில் 181 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும், ஈரோட்டில் 116 பேருக்கும் நேற்று தொற்று காணப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/3CZeRS6