சென்னை: பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரா துப்பாக்கிச் சுடுதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் பெற்றுள்ள அவனி லேகேராவுக்கு எனது வாழ்த்துகள். தாங்கள் படைத்துள்ள பெரும் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வட்டு எறிதலில் வெள்ளி வென்றுள்ள யோகேஷ் கதுனியாவுக்கும், ஈட்டி எறிதலில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள தேவேந்திரா ஜஜாரியா மற்றும் சுந்தர் சிங் ஆகியோருக்கும் பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சுமித் அந்தில் சாதனை தனிச்சிறப்பானது: பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சுமித் அந்தில் சாதனை தனிச்சிறப்பானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.  டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவுக்கு இன்று பொன்னான நாளாக அமைந்திருக்கிறது. ஈட்டி எறிதலில் ஒரே நிகழ்வில் மூன்று உலக சாதனை எறிதல்களுடன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள சுமித் அன்டிலுக்கு எனது பாராட்டுகள். அவரது சாதனை உண்மையிலேயே தனிச்சிறப்பானது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3yzec7f