துரைப்பாக்கம்: சென்னை பல்லவன் சாலை, காந்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (19). இவரது நண்பர் அஜித் (20). இவர்கள், பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் நண்பர் சாந்தகுமாரை (21), பார்க்க நேற்று முன்தினம் சென்றனர். அங்கு, மூவரும் மது அருந்திவிட்டு, போதையில் பைக்கில் சோழிங்கநல்லூர் குமரன் நகர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள பாஸ்ட்புட் கடைக்கு சாப்பிட சென்றனர்.பிரைட் ரைஸ், சிக்கன் என விதவிதமாக சாப்பிட்ட இவர்கள், பணம் கொடுக்காமல் அங்கிருந்து நைசாக வெளியேறினர். இதை பார்த்த கடையின் உரிமையாளர், மூவரையும் தடுத்து நிறுத்தி, சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது மணிகண்டன் அங்கிருந்து தப்பியோடி ராஜிவ்காந்தி சாலை சென்டர் மீடியனை தாண்டி குதித்தபோது, தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவரது தலை சாலையில் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/3zBTzZM