சென்னை, செப்.1: முகப்பேர் பகுதியை சேர்ந்தசில்பியா (54), நேற்று வடபழனி 100 அடி சாலையில் சூளைமேடு சந்திப்பு அருகே காரில்சென்ற போது, திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால், சில்பியா உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பரவி எரிந்தது. தகவலறிந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/3DyZilu