சென்னை: இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் வரவேற்றார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய நாயுடு 4 நாட்கள் பயணமாக இந்திய விமானப்படை தனி விமானத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு ஆந்திரா மாநிலம்  விசாகப்பட்டிணத்திலிருந்து சென்னை வந்தார். சென்னை பழைய  விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவரை தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர், பாராளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழக அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குண்டு துளைக்காத காரில் ஏறி, கிண்டி ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/3qAebxx