கரோனா தொற்றால் நிகழும்உயிரிழப்புகளை மறைப்பது இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 504 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார். இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, 11 கிலோலிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் சேமிப்புக் கலன்களையும் ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உடனிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்