கோவை மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அலைபேசி அழைப்புகள் மூலமாக தனிமைப்படுத் தப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களிடம், அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துரையாடினர்.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். அவ்வப்போது அதிகாரிகளுக்குத் தேவையான உதவிகள், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்