பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் கரோனாவால் முதியவர் உயிரிழந்ததை மறைத்து, சடலத்தை வீட்டில் வைத்து இறுதிச் சடங்கு நடத்திய மனைவி, மகன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் வடக்கு முதலியார் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி(69). இவர், கோ-ஆப்டெக்ஸில் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி பிச்சையம்மாள்(61). இவர்களின் மகன் முருகானந்தம் ஊட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்