செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு அருகே திருமணியில் 110 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார்600 கோடி முதலீட்டில் மத்தியஅரசு நிறுவனமான எச்.எல்.எல்பயோடெக், ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை நிறுவியுள்ளது. குழந்தைகளுக்கான முத்தடுப்பூசி, மஞ்சள் காமாலை தடுப்பூசி, வெறிநாய் தடுப்பூசி, தட்டம்மை தடுப்பூசி போன்ற ஒன்பது வகையான தடுப்பூசிகளை 56 கோடியே 40 லட்சம் டோஸ் அளவுக்கு உற்பத்தி செய்யக்கூடிய உலகதரத்திலான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உற்பத்தி தொடங்காத காரணத்தால் அதி நவீன இயந்திரங்களும் உபகரணங்களும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பயனற்ற நிலையில் போடப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் உற்பத்தி தொடங்குமேயானால் மிகக் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்