புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநிலச்செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. ஆனால், மாவட்ட ஆட்சியர் நிர்வாக திறமையின்மை காரணமாக சுகாதாரம்,வருவாய்த் துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை துறைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்