காமநாயக்கன்பாளையம் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து மூன்று ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நாய் மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் அருகே 100 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றில், அப்பகுதியினர் குப்பை கொட்டி வந்தனர். இதனால் 70 அடி ஆழமாக குறைந்தது. குட்டியாக இருந்தபோது பெண் நாய் ஒன்று இந்த கிணற்றில் தவறி விழுந்து வாழ்ந்து வந்தது. இந்நிலையில், அப்பகுதியினர் மூலமாக விலங்குகள் நலவாரியத்தினருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்