கடந்த காலத்தைப் போல இல்லாமல் தற்போது தேர்தல் களம் களையிழந்து காணப்படுகிறது. கிராமம், நகரங்களில் கட்சிக் கொடிகள், தோரணம், வீட்டுச் சுவரில் வண்ண வண்ண சின்னங்கள், கொடிகளுடன் வலம் வரும் சிறுவர், சிறுமியர், எப்போதும் கேட்கும் வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் என எதையும் காண முடியவில்லை.

தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. கொளுத்தும் வெயிலிலும் தேசிய, மாநிலத் தலைவர்கள், வேட்பாளர்களின் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இருந்தாலும் கடந்த தேர்தல்களைப் போல மக்களால் தேர்தல் திருவிழா கொண்டாடப்படவில்லை என்றே கூறலாம். முன்பெல்லாம் சட்டப்பேரவைத் தேர்தல் என்றால் குக்கிராம், கிராமம், நகரம், பெருநகரம் என எல்லா இடங்களிலும் கட்சிகளின் கொடிகள், தோரணம் இருப்பதைக் காண முடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்