விருத்தாசலத்தில் அமமுக - தேமுதிக கூட்டணி சார்பில் களம் காண்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. கடந்த 10 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், பட்டியலினத்தைச் சேர்ந்தோர் வசிக்கும் பகுதிகளில், பிரச்சாரத்திற்குச் செல்லும் போது அங்குள்ள சிலர், தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்படி கேட்க, ‘பிரபாகரன்’, ‘விஜய்‘, ‘சத்ரியன்’ என பிரேமலதா பெயர் சூட்டி வருகிறார்.

அந்த வகையில் நேற்று முன்தினம் புதுகூரைப்பேட்டை கிராமத்தை அடுத்த குப்பநத்தம் குடியிருப்புப் பகுதியில் ஒரு குழந்தைக்கும், தே.புடையூர் கிராமப் குடியிருப்புப் பகுதியில் ஒரு குழந்தைக்கும் ‘சத்ரியன்’ என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்