கன்னியாகுமரியில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மறுநாள் 3-ம் தேதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுடன், மக்களவை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனால், தமிழக தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்கள் கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஏற்கெனவே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குமரியில் பிரச்சாரம் செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்