எ.வ.வேலு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.25 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சரு மான எ.வ.வேலு வீட்டில் வருமான வரித் துறையினர் கடந்த 25-ம் தேதி சோதனை நடத்தினர். அவரது வீடு, கல்லூரி, அறக்கட்டளை, குடும்ப உறுப்பினர்களின் வீடுகள் உட்பட 18 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்