சென்னை: சென்னையில் வரும் 15 நாட்களுக்கு உண்ணாவிரதம், ஊர்வலம் போன்றவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை காவல்துறை எல்லைக்குள் ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலி, கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்படி 31.3.21 (நேற்று) முதல் வரும் 15.4.21 வரை 15 நாட்களுக்கு இத்தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/2QWYova