மாசிமகத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்றுகூடிய இருளர் மக்கள், தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை பாரம்பரிய முறையில் வழிபட்டு, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரைக் கோயில் மற்றும்குடைவரை சிற்பங்களின் அழகைக் கண்டு ரசிப்பதற்காக, நாள்தோறும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்கள், உள்ளூர் என ஏராளமான சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர். மேலும், மாசிமகத் திருநாளில் இருளர் இன மக்கள், கடற்கரையில் ஒன்றுகூடி 3 நாட்கள் குடில்கள் அமைத்து தங்கியிருந்து, அவர்களின் குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டுச் செல்வர். மாசிமக நாளையொட்டி நேற்று முன்தினம் கடற்கரையில் ஒன்றுகூடிய இருளர் இன மக்கள் மரங்கள் மற்றும் தார்பாய், பிளாஸ்டிக் பொருட்களால் குடில்கள் அமைத்து தங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்