சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளி மாவட்டங்களுக்கு செல்ல காத்திருந்த பயணிகள் பேருந்துகள் இல்லாமல் அவதி அடைந்தனர். போராட்டத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



from Dinakaran.com |27 Feb 2021 https://ift.tt/2ZX4gpA