திருப்போரூர் கந்தசுவாமி மற்றும் ஸ்தலசயன பெருமாள் கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக நேற்று நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற கந்தசுவாமி கோயிலில், மாசிமாத பிரம்மோற்சவம் கடந்த மாதம் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு வானங்களின் மீது சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வயானையுடன் உற்சவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்