ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் என்ற அறிவிப்பு வெளியானதும் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்த பலமுள்ள கட்சியாக கருதப்படும்பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் திமுககூட்டணியில் யாருக்கு எத்தனை இடம் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் அடுத்த பிரதான கட்சியாக இடம்பெற்றுள்ள காங்கிரஸ் இந்த முறை கணிசமான இடங்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் காய்களை நகர்த்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தமிழகத்தில் பலகட்ட சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுவாக்குகளை சேகரித்து வருகிறார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ராகுலுக்கு திரளும் கூட்டத்தைப் பார்த்து திமுகவினரே ஆச்சர்யமடைந்துள்ளனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெற முடியாமல் போனது, சமீபத்தில் நடந்த பீகார் தேர்தல்முடிவுகள் ஆகியவற்றின் பின்னணியில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற குரல் திமுகவினர் மத்தியில் எழுந்தது. ஆனால், ராகுலுக்கு தற்போது திரளும் கூட்டம் திமுகவினரை மறுசிந்தனைக்கு உள்ளாக்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்