தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 59 வயது வரைபல நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றுக்காக முன்களப் பணியாளர்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் அரசு, தனியார் என 166 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. முதல் தவணை முடிந்து 28 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்