அதிமுக- அமமுக இணைப்புக்கு வாய்ப்பு இல்லை. அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்க்க பரிசீலிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நேற்று மாலை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக-வில் இல்லாத சசிகலா கட்சியின் கொடியை, அவர் பயணித்த காரில் பயன்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான். இதுதொடர்பாக அதிமுக பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் உருவாக்கப்பட்டது. இது செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்