தாம் சுயமாகக் கற்றுத் தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஏழைக் குழந்தைகளுக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் இலவசமாக கற்றுத் தருகிறார் பொறியியல் பட்டதாரி ராகவன்.

திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜூ - விஜயலட்சுமி தம்பதியின் மகன் ராகவன். செஸ் விசுவநாதன் ஆனந்தின் சாதனையைப் பார்த்து தானும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பள்ளி பருவத்தில் சதுரங்கப் பயிற்சி பெற தொடங்கிய இவர், பொறியியல் பட்டம் பெற்று தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தவர். இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்