கிழக்கு கடற்கரை சாலையில் மாநகராட்சி மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டப் பணிகளை நிறுத்துமாறு, சுற்றுச்சூழல் துறையின் கீழ் வரும்,மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மதிக்காமல் மாநகராட்சி, பணிகளை தொடர்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்
கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை ஜெர்மன் வளர்ச்சி வங்கி (KFW Development Bank) வழங்கி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்