ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளில் போலீஸாரின் கடும் சோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டு தினத்தன்றும் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏஎஸ்பி சுந்தரவதனம் தெரிவித்தார்.

மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள சொகுசு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையில் 8 ஆய்வாளர்கள் மற்றும் 400 போலீ
ஸார் முட்டுக்காடு, நாவலூர், திருப்போரூர், மாமல்லபுரம் நகர எல்லை உள்ளிட்ட பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட
னர். இதில், பண்ணை வீடுகள் மற்றும் சொகுசு விடுதிகளுக்கு முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்த நபர்களை மட்டுமே செல்ல போலீஸார் அனுமதித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்