கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 9 மாதங்களாக ‘யுனெஸ்கோ’ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயில் இயக்கப்படவில்லை. இடையில் சில நாட்கள் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு இயக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் வழக்கமான கட்டணத்துடன் மலை ரயில் இயக்கப்பட்டது.

முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் இணைய தளம் வழியாக முன்பதிவு செய்தனர். இதனால் அனைத்து இருக்கைகளும் நிரம்பின. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ‘ஹவுஸ் ஃபுல்’-ஆக ரயில் வந்தடைந்தது. உதகை ரயில் நிலையத்தில் மலை ரயில் அறக்கட்டளை நிறுவனர் நடராஜ் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்