கார்த்திகை தீப திருநாளை ஒட்டி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

காஞ்சிபுரம் நகரப் பகுதியில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏகாம்பரநாதர் கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி மகாதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல் கச்சபேஸ்வரர், முக்தீஸ்வரர், கயிலாசநாதர், சத்யநாதஸ்வாமி, வழக்கறுத்தீஸ்வரர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் மகாதீப சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், குமரக்கோட்டம் உள்ளிட்ட முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்