செம்பரம்பாக்கம் ஏரி நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் மதகுகளை சரி செய்ய வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ‘நிவர்' புயலையொட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீரை வெளியேற்றத் திறந்துவிடப்பட்ட 2 மற்றும் 3-வது மதகுகளை மூடமுடியாமல் இப்போது 400 கனஅடி நீர் வீணாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்