சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளிலும் தகவல் தொழில்நுட்ப அணி மிகப் பெரிய சக்தியாக மாறியுள்ளது. இவை, ஐ.டி. நிறுவனங்களைபோல அலுவலகம், ஊழியர்களுடன் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன.

அதிவேகமாக வளர்ந்து வரும்தொழில்நுட்பத்தால் இப்போது அனைத்து அரசியல் கட்சிகளிலும் தகவல் தொழில்நுட்ப அணி மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருக்கும்போதே தகவல் தொழில்நுட்பத்தையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்த தொடங்கிவிட்டார். குஜராத்தில் அவரது தொடர் வெற்றிக்கும், பிரதமராக அவர் உயர்ந்ததற்கும் இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்