வயலின் வாசிப்பில் தனது தனிப்பட்ட திறமையால் கர்னாடக இசை உலகில் ராஜபாட்டை அமைத்தவர் டி.என்.கிருஷ்ணன் அண்ணா. கர்னாடக இசை உலகில் பெருவாழ்வு வாழ்ந்த அவர், கடந்த நவ.2-ம் தேதி தனது 92-வது வயதில் காலமானார். 1950, 60-களின் தொடக்கத்தில் நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே, இசைத் துறையில் அவரது அன்பான வழிகாட்டுதல் எனக்கு கிடைத்தது.

ஆலப்புழாவில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் என்னை பாடவைத்து மகிழ்வார். நான்பாடுவேன். பிரபல வித்வான் மருங்காபுரி கோபாலகிருஷ்ண ஐயர் என் பாட்டிக்கு கொடுத்திருந்த வயலினை டிஎன்கே வாசிப்பார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்