உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு, அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் தொடர்பான நூல்கள், அகராதி, அரிய நூல்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்