செங்கல்பட்டில் சிறப்பு ரயிலில் அனுமதிக்கப்படாததால் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அவதிக்குஉள்ளாயினர்.

‘கரோனா’ முழு ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தமிழக அரசு அனுமதியுடன் தலைமைச் செயலக ஊழியர்கள், மருத்துவத் துறை, நீதிமன்ற ஊழியர்கள், வணிகவரித் துறை, கல்வித்துறை உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், ரயில்வே துறையின் சிறப்பு அனுமதியுடன் பயணித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்