தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியதால் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 58,948 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, 40,185 ஹெக்டேரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து வயல்களிலும் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பாபநாசம் பகுதியில் கணபதி அக்ரஹாரம், மணலூர், கபிஸ்தலம், சாலியமங்கலம், கோவிலூர், அருள்மொழிப்பேட்டை உள்ளிட்டபகுதிகளில் 200-க்கும் மேற்பட்டஏக்கரில் வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து, நெற்கதிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்