திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.17ல் தொடங்குகிறது. தங்கக் கொடி மரத்தில் நவ.20-ல் கொடியேற்றமும் நவ.29-ல் மகா தீபமும் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள, அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை பந்தக்கால் நடப்பட்டது. மங்கள இசை ஒலிக்க, சிவாச்சாரியாரிகளின் வேத மந்திரங்கள் முழங்க, ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் நடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்