பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.2000 நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

கடந்த 2016 நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்தது. அப்போது, தொழிலதிபர் சேகர்ரெட்டியின் வீட்டில் ரூ.2000 நோட்டுகள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக சேகர் ரெட்டி மற்றும் அவரதுநண்பர்கள் 6 பேர் மீது சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்