கரோனா விழிப்புணர்வு, காய்ச்சல் முகாம்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளால் சென்னையில் கரோனா பரவல் குறைந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகளை அளிப்பது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கே.சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்