சாகித்ய அகாடமி விருது பெற்றஎழுத்தாளர் சா.கந்தசாமி நேற்றுகாலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை நந்தனத்தில் வசித்துவந்த சா.கந்தசாமி சமீபகாலமாக இதயநோய் பிரச்சினையால் அவதிப்பட்டுவந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை 7.15 மணிக்கு காலமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்