தற்போதைய சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என பெயர் மாற்றம் செய்யவோ, தமிழை வழக்காடு மொழியாக்கவோ இயலாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மாநில மொழியான தமிழை உயர் நீதிமன்ற அலுவல், வழக்காடு மொழியாக்க வேண்டும்’ என்று 2019 டிசம்பர் 4-ம் தேதி மாநிலங்களவையில் தாங்கள் கோரிக்கை வைத்தீர்கள். பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் உயர் நீதிமன்றங்கள் 1862-ம் ஆண்டு காப்புரிமை பட்டயச் சட்டப்படி தோற்றுவிக்கப்பட்ட சார்ட்டர்டு உயர் நீதிமன்றங்கள். விடுதலைக்குப் பிறகும், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 225-ன்படி தொடர்ந்து அதே பெயரில் இயங்குகின்றன. இவற்றை மாநிலங்களின் பெயரிலேயே மாற்றுமாறு மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தமிழக அரசுகள் விடுத்த பரிந்துரையை ஏற்று, பெயர் திருத்தம் தொடர்பான சட்ட முன்வரைவு, மக்களவையில் 2016 ஜூலை 19-ல் அறிமுகம் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்