சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் கோட்டாறைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் நாகர்கோவில் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், சிறுமியின் தாயார் உட்பட 5 பேர் மீது நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்