பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களின் கரைகள் பல்வேறு இடங்களில் சரிந்துள்ளன. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து அனுப்பப்பட்ட கிருஷ்ணா நீர் கடந்த ஜூன் மாத இறுதியில் நிறுத்தப்பட்டது. இதனால், பூண்டி ஏரியின் நீர் இருப்பு கணிசமாக குறைந்தது. நேற்றைய நிலவரப்படி 88 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு குறைந்தது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்