சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் அதிமுக்கியமான வழக்குகளில் தமிழக அரசுக்காகஆஜராக அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞராக ஏ.எல்.சோமயாஜியை அரசு நியமித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசுக்காக வாதிட அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தலைமையில் ஏற்கெனவே 9 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் உள்ளனர். இதுதவிர மாநில தலைமை குற்றவியல்வழக்கறிஞராக ஏ.நடராஜனும், அரசு ப்ளீடராக வி.ஜெயப்பிரகாஷ் நாராயணனும் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்