கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஜிஆர் கண்டிகை அருகே பில்லாகுப்பம்  அருகில் அழுகிய நிலையில் ஆண் சடலம், நிர்வாணமாக இருப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார், நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். சடலமாக கிடந்தவருக்கு 45 வயது இருக்கும். உடல் அழுகிய நிலையில் நிர்வாணமாக இருந்தது. மர்ம உறுப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை அடித்து கொலை செய்து உடலை வீசி சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.



from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/39IACcm