புழல்: பழைய அலமாதி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (45). பெயின்டர். இவருக்கு செல்வி(41) என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதற்காக, பைக்கில் திருவள்ளூர் நெடுஞ்சாலை அலமாதி ஈஸ்வரன் கோயில் அருகே சென்றார். அப்போது, திடீரென சாலையின் குறுக்கே ஓடிய  நாய் மீது பைக் மோதியதில், ரவிச்சந்திரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அப்பகுதியினர், அவரை பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், மேல் சிகிச்சைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ரவிச்சந்திரன் இறந்தார்.



from Dinakaran.com |01 Oct 2021 https://ift.tt/3zRAUZf