திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே அகில இந்திய ரயில்வே எஸ்சி, எஸ்டி தொழிற்சங்கம் சார்பில் ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க கிளை செயலாளர் கிரிதரன் தலைமை தாங்கினார். தென்மண்டல ஆலோசகர் வி.ஜேம்ஸ் வரவேற்று பேசினார். கிளை தலைவர் மதன்ராஜ், பொருளாளர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.ஜே.உமா மகேஸ்வரன் அறிமுக உரையாற்றினார். இதில் அகில இந்திய ரயில்வே எஸ்சி. எஸ்டி தொழிற்சங்கத்தின் தென்மண்டல பொது செயலாளர் ஏ.ஞானசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/3DB12KY