வால்பாறை: சென்னை மேற்கு மாம்பலம், குப்பையா தெரு, மௌலி அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் ராம்(25). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை ராம், நண்பர்கள் 3 பேருடன் வால்பாறைக்கு சுற்றுலா சென்றார். சோலையார் அணை கரையோரம் உள்ள ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்பகுதியினர் தடை செய்யப்பட்ட பகுதி என்று எச்சரித்தும் கேட்கவில்லை. அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு 2000 கன அடி வீதம் வந்த வெள்ளத்தில் திடீரென ீராம் அடித்துச்செல்லப்பட்டார். நண்பர்களால் அவரை மீட்க முடியவில்லை. அவரது உடலை தேடும் பணி நடக்கிறது.
from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3yuBHhO
0 கருத்துகள்