வால்பாறை:  சென்னை மேற்கு மாம்பலம், குப்பையா தெரு, மௌலி அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் ராம்(25). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை ராம், நண்பர்கள் 3 பேருடன் வால்பாறைக்கு சுற்றுலா சென்றார். சோலையார் அணை கரையோரம் உள்ள ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்பகுதியினர் தடை செய்யப்பட்ட பகுதி என்று எச்சரித்தும் கேட்கவில்லை.  அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு 2000 கன அடி வீதம் வந்த வெள்ளத்தில் திடீரென ீராம்  அடித்துச்செல்லப்பட்டார். நண்பர்களால் அவரை மீட்க முடியவில்லை. அவரது உடலை தேடும் பணி நடக்கிறது.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3yuBHhO