திருப்போரூர்: காயார் கிராம வனக்குழு சார்பில், கிராம மக்களுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்தது. காயார் கிராம வனக்குழு சார்பில் கடன் வழங்கும் முகாம் காயார் கிராமத்தில் நேற்று நடந்தது. வனக்குழு உறுப்பினர் டி.தேவசகாயம் வரவேற்றார். காயார் கிராம வனக்குழுத் தலைவர் காயார் ஜி.மோகனராமன் தலைமை தாங்கினார். திருப்போரூர் வனச்சரக அலுவலர் பி.கல்யாண் திட்ட விளக்க உரையாற்றினார். இதில், தலா ரூ.10,400 வீதத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 18 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும், சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 4 பேருக்கு தலா ரூ.5000 வீதம் கடன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் வனக்குழு உறுப்பினர் எம். மகேஸ்வரி நன்றி கூறினார்.



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/2WCKam6