சென்னை: சினிமா இயக்குனர் சந்தோஷ்ராய் கைது குறித்துடெல்லி போலீசார் கூறுகையில், ‘டெல்லி அமலாக்க பிரிவு அலுவலக முகவரியில், சிலருக்கு நோட்டீஸ் அனுப்பி ஒரு கும்பல் பணம் பறித்து வருவதாக புகார்கள் வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் ராஜீவ் சிங் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதுதொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனகரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லியின் பாராளுமன்ற தெரு காவல் நிலையம் அருகே, மோசடி வேலைகளை செய்து வந்த 4 பேர் கும்பலை கைது செய்தோம். இந்த கும்பலுக்கு டாக்டர் சந்தோஷ் ராய் என்பவர் தலைமை வகித்துள்ளார்.இவர், ேகாட்ஸே என்ற திரைப்படத்தின் இயக்குனராவார். கைது செய்யப்பட்ட சந்தோஷ் ராய் மீது ஒடிசாவில் 50க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர், தன்னை அமலாக்க இயக்குனரக மதிப்பீட்டு அதிகாரி என்று கூறிக் கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பல கோடி மோசடி செய்துள்ளார்’ என்றனர்.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3kC3cBe