திருவொற்றியூர்: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இட நெருக்கடியை குறைக்க திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.200 கோடி  செலவில், சூரை மீன்பிடித்துறைமுகம் கட்டுமான பணி நடைபெற்று  வருகிறது. இந்நிலையில், மீன்வளத்துறை கமிஷனர் பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள், நேற்றுமுன்தினம் மாலை, திருவொற்றியூர், சூரை மீன்பிடித்துறைமுக பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது,  விரிவு படுத்தப்பட வேண்டிய இடங்கள் குறித்து தலைமை பொறியாளர் ராஜி மற்றும் அதிகாரிகளிடம்  கேட்டறிந்தார். பின்னர், கடலில் நடைபெறும் தூண்டில் வளைவு பகுதிக்கு சென்று, அங்கு நடக்கும் பணிகளையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/3lamEqJ