செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் கோவளம் ஊராட்சியில் ‘எஸ்டீஎஸ் அறக்கட்டளை மற்றும் ஸ்கோப் நண்பர்கள் குழு’ சார்பில் அவசரகால சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மையத்தில் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை போனில் தொடர்புகொண்டு பெறும் வகையில் 9042117888, 9710923888, 7305265488 ஆகிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தடுப்பதற்காக இச்சேவையை தொடங்கியிருப்பதாக, அறக்கட்டளையின் நிறுவனர் சுந்தரம் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்