தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்று குறைந்து வரும் நேரத்தில்தான் மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், தனியார் பங்களிப்பு மற்றும் மருத்துவமனை உதவியுடன், 130 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் குறித்த விவரமும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ. ஜான் லூயிஸ், குரோம்பேட்டை மருத்துவமனை மருத்துவ அலுவலர் பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்